ஞாயிறு, 30 ஜூன், 2013

பின்னங்கள்/சதவீதம்/விகிதம்/வட்டி O/L QUETIONS


v  பின்னங்கள்/சதவீதம்/விகிதம்/வட்டி தொடர்பான ஒரு புள்ளிக்குரிய கடந்தகால வினாக்கள் .
1.     ரூ.450க்கு வாங்கிய கதிரையை ரூ 425 க்கு விற்கும் போது ஏற்படும் நட்டம் யாது?
2.     மூன்று தோடம்பழங்களின் விலை ரூ 72 எனின் ஒரு தோடம்பழத்தின் விலை யாது?
3.     ரூ.62 விலையுள்ள பொருளுக்காக பணத்தை செலுத்துவதற்கு ரூ.100 தாளை கொடுக்கும் போது கிடைக்கும் மீதி யாது?
4.     ஒன்று ரூ.12.50 வீதம் 6 பேனைகளை வாங்கத்தேவையான பணம் யாது?
5.     40km/h இல் செல்லும் பேருந்து 2 மணித்தியாலத்தில் செல்லும் தூரத்தை காண்க?

v   பின்னங்கள்/சதவீதம்/விகிதம்/வட்டி தொடர்பான இரு புள்ளிகளுக்குரிய கடந்தகால வினாக்கள்.
1.     ஒரு குறித்த வேலையயை செய்வதற்கு ஒரு மனிதன் 8 நாட்கள் எடுக்கிறான் அத்தகைய இரு மனிதர்கள் இரு நாட்கள் வேலை செய்தால் அவ்வேலையின் எப்பின்னத்தை செய்து முடிக்கலாம் ?
2.     ஒரு தொட்டியில் ஐ நிரப்புவதற்கு ஒரு நீர்ப்பம்பி 24 நிமிடம் எடுத்தால் தொட்டியின்
அரைவாசியை நிரப்புவதற்கு பம்பி எத்தனை நிமிடம் எடுக்கும்?
3.     ஒரு பொருளை விற்கும் போது அதன் குறித்த விலையில் 8  கழிவு கொடுக்கப்படுகின்றது. ரூ.368 இற்கு விற்கப்படும் ஒரு பொருளின் குறித்த விலையை காண்க?
4.     சீரான கதியுடன் நீர் பாயும் குழாய் ஒன்றிலிருந்து 10 செக்கனில் 40 லீற்றர்  நீர் வெளியேறும் குழாயிலிருந்து நீர் பாயும் கதி லீற்றர்/நிமிடத்தில் தருக ?
5.     வீடமைப்பு திட்டம் ஒன்றில் ஒரு வீட்டில் தீந்தையை பூசுவதற்கு இரு மனிதர்கள் 3 நாட்கள் எடுக்கின்றனர் அத்தகைய 10 வீடுகளில் 12 நாட்களில் தீந்தையை பூசிமுடிப்பதற்கு எத்தனை மனிதர்களை ஈடுபடுத்தபடவேண்டும்?
6.     ஒரு பாத்திரத்தில் 8l எண்ணெய் உள்ளது இந்த எண்ணெய் 750 ml போத்தல்களில் நிரப்பப்படுகின்றது நிரப்பப்படத்தக்க போத்தல்களின் உயர்ந்த பட்ச எண்ணிக்கை?அப்போது எஞ்சியிருக்கும் எண்ணெயின் அளவு எத்தனை ml ?
7.     கொழும்பு பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கண்டிக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு தடைவையும், அனுராதபுரத்திற்கு 35 நிமிடங்களுக்கு ஒருதடவையும் ,காலிக்கு 20 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் பேருந்துகள் புறப்படுகின்றன.  நண்பகல் 12.00 இற்கு இம்மூன்று நகரங்களுக்கும் ஒரே தடவையில் மூன்று பேருந்துகளும் புறப்படுகின்றன. அடுத்து எத்தனை மணிக்கு மூன்றும் ஒருமித்து புறப்படும்?
8.     ஒரு தொட்டிக்கு நீர் 500ml/நிமிடம் எனும் வீதத்தில் பம்பப்படுகிறது. ஒரு மணித்தியாலத்தில் தொட்டியில் சேரும் நீரின் கனவளவை லீற்றறில் தருக?
9.     மூவர் ஒரு குறித்த வேலையை செய்து முடிப்பதற்கு 6 நாட்கள் எடுக்கின்றனர் அவர்களில் ஒருவர் முதல் மூன்று நாட்களுக்கு மாத்திரம் வேலைக்கு வராவிட்டால் அவர்கள் மூவரும் அவ்வேலையயை செய்து முடிப்பதற்கு எடுக்கும் நாட்களின் மொத்த எண்ணிக்கை யாது ?
10.  1.5 kgநிறையுள்ள வெற்றுப் பெட்டியினுள்ளே சமநிறையுள்ள 5 புத்த்ககங்கள் அடுக்கப்பட்டுள்ளன புத்தகங்கள் உள்ள பெட்டியின் மொத்த நிறை 5.25 kg எனின் ஒரு புத்தகத்தின் நிறையை காண்க?

v  பின்னங்கள்/சதவீதம்/விகிதம்/வட்டி தொடர்பான 10 புள்ளிகளுக்குரிய கடந்தகால வினாக்கள் .
1.     மாலா ஒரு தொகை மாம்பழங்கள்வாங்கினார். அம்மாம்பழத்தொகையில்  பழுதடைந்திருந்தன பழுதடையாத மாம்பழங்களில் மாங்காய்களாக இருந்தன. அவர் எஞ்சிய பழுதடையாத பழுத்த மாம்பழங்களை விற்றார்.
            i.        பழுதடையாத மாம்பழகங்களின் எண்ணிக்கை மாம்பழங்களின் மொத்த எண்ணிக்கையில் என்ன பின்னமாகும்?
           ii.        விற்ற மாம்பழகங்களின் எண்ணிக்கை மாம்பழக்ங்களின் மொத்த எண்ணிக்கையில் என்ன பின்னமாகும்?
          iii.        வாங்கிய மாம்பழத்தொகையில் 400 மாம்பழங்கள் இருந்தன மாலா பழுதடையாத பழுத்த மாம்பழங்களை ஒன்று ரூ.10 வீதம் விற்றால் அவர் மாம்பழங்களை விற்பதன் மூலம் பெற்ற பணத்தொகை யாது?
          iv.        மாம்பழத்தொகையை வாங்கிய பணத்திலும் பார்க்க 20  கூடுதலான பணத்தை மாம்பழங்களை விற்பதன் மூலம் மாலா பெற்றால் மாம்பழத்தொகையை வாங்கிய விலையை காண்க?
2.      

a)     -    இன் 3 சுருக்குக?

b)    வர்த்தகர் ஒருவர் ரூ.8000 இற்கு ஒரு சைக்கிளை வாங்கிக்கொண்டு 20 இலாபம் கிடைக்கத்தக்கதாக அதன் விற்பனை விலையை குறிக்கின்றார். எனினும், அதனை விற்கும் போது அவர் குறித்த விலையில் 10 கழிவு கொடுக்கின்றார்.
          i.        சைக்கிளின் குறித்த விலை யாது ?
         ii.        சைக்கிள் விற்கப்படும் விலை யாது?
        iii.        வர்த்தகருக்கு கிடைக்கும் இலாபத்தை சதவீதமாகத் தருக?
3.     முகுந்தன் தனது சம்பளத்தில் ஐ உணவிற்கும் ஐ போக்குவரத்திற்கும் செலவு செய்கிறார் மீதிப்பணத்தில்  ஐ புத்தகங்கள் வாங்கச் செலவு செய்கிறார்.
        i.        போக்குவரத்து,உணவு ஆகிய இரண்டிற்கும் அவர் எவ்வளவு பங்கை செலவு செய்தார்?
       ii.        புத்தகங்களை வாங்குவதற்கு அவர் எவ்வளவு பங்கை செலவு செய்தார்?
      iii.        இப்போது அவர் தம்மிடம் உள்ள மீதிப்பணத்தில்  ஐ ஒரு வங்கிக்கணக்கில் வைப்புச்செய்கிறார் அவ்வாறு வைப்புச்செய்யும் பணம் ரூ.3000 எனின் , முகுந்தனின் சம்பளம் யாது?
4.    
ஒருவர் தமது காணியில் அரைவாசியை மனைவிக்குக்கும் மீதியை சமமாக மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுப்பதற்கு உத்தேசித்தார். எனினும் அவர் அவசர தேவைக்காக காணியில் ஐ விற்க வேண்டியிருந்தது. பின்னர் மீதிக்காணியை முன்னர் உத்தேசித்தவாறு பிரித்துக்கொடுத்தார்
 



i.        காணியில் பங்கை விற்ற பின்னர் எஞ்சியிருக்கும் அளவு மொத்தக்காணியில் என்ன பின்னமாகும்?
ii.        மொத்தக்காணியில் என்ன பங்கு மனைவிக்கு கிடைத்தது?
iii.        மொத்தக்காணியில் என்ன பங்கு ஒரு பிள்ளைக்கு கிடைத்தது?
iv.        காணியில் ஒரு பங்கை விற்க முன்பாக ஒரு பிள்ளைக்கு வழங்குவதற்கு குறிப்பிட்ட காணியின் அளவிற்கும், பின்னர் கிடைத்த காணியின் அளவிற்குமிடையே உள்ள வித்தியாசம் 12 ஹெக்ரெயர் எனின்,மொத்தக்காணியின் பருமனை ஹெக்ரெயரில் காண்க?


5.    
A,B ஆகிய இருவரும் 4 : 5 என்னும் விகிதத்திற்கு பணத்தை இட்டு ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தனர்

 


              i.        A ஆனவர் ரூ 20000 ஐ இட்டால் B இட்ட பணம் யாது?
             ii.        ஆண்டின் இறுதியில் ரூ.6000 இலாபம் கிடைக்கும் அதே வேளை அதில் 10 ஆனது மறுபடியும் வியாபாரத்திற்கு இடப்பட்டது மீதிப்பணம் இருவரும் இட்ட பணத்தின் விகிதத்திற்கேற்ப பகிரப்பபட்டதெனின் A இற்கும்  B இற்கும் கிடைத்த பணத் தொகைகளைத் தனித்தனியே காண்க?
b)    பெரிய பிரித்தானியாவில் இருக்கும் மோகனுக்கு அவருடைய தந்தையார் 340 யூரோ பணத்தை அனுப்பினார் அதன் பெறுமானம் எத்தனை ஸ்ரேலிங் பவுன் (1 யூரோ 145 இலங்கை ரூபா எனவும், ஒரு ஸ்ரேலிங் பவுன் 170 இலங்கை ரூபா எனவும் கொள்க)

6.     தோடம்பழ்ச்சாறு,நாரத்தைச்சாறு,நீர் ஆகியவற்றை முறையே 300ml,200ml,500ml வீதம் கலந்து ஒரு பானக்கலவை தயாரிக்கப்பட்டுள்ளது.
i.        இக்கலவையில் உள்ள தோடம்பழ்ச்சாறு, நாரத்தைச்சாறு,நீர்ஆகியவற்றுக்கிடையேயான விகிதத்தை எளிய வடிவில் தருக ?
ii.        இக்கலவையில் உள்ள நீரின் சதவீதம் யாது?
iii.        இக்கலவையில் இருந்து எடுத்த ஒரு பானக் குவளையில் 50 ml நாரத்தைச்சாறு உள்ளது.  அதில் உள்ள தோடம்பழச் சாற்றின் அளவு யாது?
iv.        இக்கலவையில்  800 ml உடன் மேலும் நீரை சேர்க்கும் பொது கிடைக்கும் புதிய கலவையில் உள்ள தோடம்பழ்ச்சாறு, நாரத்தைச்சாறு,நீர்ஆகியவற்றுக்கிடையேயான விகிதத்தை காண்க?


ஆண்டின் தொடக்கத்தில் மோகன் ரூ.8000 ஐ இட்டு ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தார் அதற்கு மூன்று மாதங்களின் பின்னர் முகுந்தனும் அதிலிருந்து மேலும் மூன்று மாதங்களின் பின்னர்   ஷங்கரும் ரூ.8000 வீதம் இட்டு வியாபாரத்தில் இணைந்தனர் ஆண்டின் இறுதியில் வியாபாரத்தில் இருந்து ரூ.7200 இலாபம் கிடைத்தது .

 
7.      


i.        “சமமாகப் பணம் இடப்பட்டிருக்கின்றமையால் இலாபமும் மூவருக்குமிடையே சமமாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்பது ஷங்கரின் கருத்தாக இருந்தது இக்கருத்து நியாயமானதன்று என்பதற்கு காரணங்களை எழுதுக ?
ii.        மூவருக்குமிடையே இலாபம் பிரிக்கப்படவேண்டிய விகித்ததை எளிய வடிவில் தருக?
iii.        இதற்கேற்ப மோகனுக்கு கிடைக்கும் இலாபத்தைக் கண்டு அதனை அவர் இட்ட பணத்தின் சதவீதமாகக் காட்டுக?


8.    
மோகன் சுய தொழிலுக்காக பாதணிகளை உற்பத்தி செய்கின்றான. பாதணிச்சோடி ஒன்றின் உற்பத்தி விலை ரூ 500 ஆக இருக்கும் அதே வேளை, அதன் மூலப் பொருள்களுக்கான செலவும் வேலைக்கூலிக்குமிடையே உள்ள விகிதம் 3:2 ஆகப்பிரிக்கப்பட்டுள்ளது . அவர் அப்பாதாணிச்சோடி ஒன்றை ரூ.625 க்கு விற்கின்றார்.
 





i.        பாதணிச்சோடி ஒன்றை உற்பத்தி செய்கையில் மூலப்பொருளுக்கான செலவையும் வேலைக்கூலியையும் தனித்தனியாகாக காண்க?
ii.        பாதணிச்சோடி ஒன்றைவிற்பதன்  மூலம் மோகனிற்கு கிடைக்கும் இலாப சதவீதத்தை காண்க?

மூலப்பொருளுக்கான செலவு 12 இனால் அதிகரிக்கும் போது மூலப் பொருள்களுக்கான செலவும் வேலைக்கூலிக்குமிடையே உள்ள விகிதம் 4:3 ஆகுமாறு அதிகரிக்கின்றது
i.        பாதணிச்சோடி ஒன்றின் தற்போதைய உற்பத்திச்செலவு யாது?
ii.        முன்னர் பெற்ற அதே இலாபச் சதவீதத்தை  பெறுவதற்கு பாதணிச்சோடி ஒன்று தற்போது விற்கப்படவேண்டிய விலை யாது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக